Harini's 2020 Hero is Mr. Sathya, her uncle

Harini says: "MY 2020 HERO (என் மாமா திரு சத்தியா அவர்கள் ) அன்று மார்ச் 24 ஆம் நாள். கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. தான் நடத்தி வந்த தட்டச்சுத் தொழில் பெரிதும் முடங்கியதால் மனம் வருந்தினார் சத்தியா. ஆனால் அவர் அத்துடன் முடங்கி விடவில்லை அவரது வீட்டருகில் விடுதிகளில் தங்கி வேலை பார்த்துவந்த ஆடவர்கள் பலரும் முறையான உணவின்றித் தவித்து வந்ததை கவனித்தார். அப்பொழுது சுய தொழில் ஆரம்பிக்கும் எண்ணம் அவரது மனதில் எழும்பியது. மறுநாள் முதற்கொண்டு, அவரது மனைவி இயற்கை முறையில் சத்தான உணவை சமைத்துக் கொடுக்க தேவைப்படுவோருக்கு அதை உரிய நேரத்தில் சேர்ப்பிக்கத் தொடங்கினார். வீட்டில் தயார் செய்த உணவு என்பதால் பலரும் வாங்க முன்வந்தனர். அவர் தனது தொழிலில் மும்முரமாக ஈபெட்டதன் காரணமாக நல்ல வருமானம் கிடைத்தது. அடுத்த சில மாதங்களில் ஒரு கைதேர்ந்த வியாபாரியாக உருவெடுத்தார். வருவாய் ஈட்டியதோடு நில்லாமல், ஊரடங்கு காலத்தை நன்கு பயன்படுத்தியதால் மனநிறைவு கொண்டார். சோதனையை சாதனையாக மாற்றிய சத்தியா அவர்கள் என்னைப் போன்ற பலருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறார் !