Aarabi's 2020 Hero is the street cobbler

Aarabi says: "வணக்கம்.என்னுடைய கதாநாயகன் (hero) யாரென்றால் என் தெருவில் செருப்புகளை தைத்து வரு‌ம் ஒரு தாத்தா. அவருடைய தொழில் செருப்புகளை தைத்துத் தருவது. அவர் இதனையே தனக்கு பிடித்தமான தொழில் என்றும் கூறுவார். அடுத்தவர்களுக்கு அவர்களின் செருப்பை தைத்துக்கொடுப்பதே அவரது முழுமையான பணி ஆகும். நன்றாக வாழ்ந்து வந்த அவர், கொரோனாவின் காரணத்தால் உணவு கிடைக்காமல் தவித்து வந்தார். இதனை பார்த்த என் தெருவில் வசிக்கும் மனிதர்கள் அவருக்கு தினமும் உணவு கொடுத்து வந்தனர். ஆனால் அந்த பெரியவர் விடாமுயற்சியுடன் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அங்குள்ளவர்களின் கிழிந்த செருப்புகளை சரிசெய்து கொடுத்தார். ஏனென்றால், அடுத்தவரிடம் கையேந்தி நிற்கும் நிலையை தடுப்பதற்காக. மிகவும் ஆச்சரியமான செயல் இது. எனவே, எனக்கு பிடித்த கதாநாயகன் அந்த நல்ல உள்ளம் கொண்ட அந்த தாத்தா.