Jayashree's 2020 Hero is Dr. Akilan

Jayashree says: "வணக்கம். - மருத்துவர் அகிலன். அவர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அவருக்கு 2 வயது குழந்தை ஒன்று உள்ளது. அவர் இந்த ஊரடங்கு அறிவித்த மார்ச் 24 ஆம் நாள் முதல் மருத்துவமனையில் தங்கி பணியாற்றி வந்தார். அவர் தனது முழு நேரப் பணியாக நோயாளிகளை குணப்படுத்துவதில் தான் கவனம் செலுத்தினார். தன்னை நம்பி வந்த கொரோணா நோயாளிகளை முழுமையாக குணப்படுத்த வேண்டும் என்று எண்ணினார். அவர் தனது 2 வயது குழந்தை மற்றும் தனது குடும்பத்தினரைப் பற்றி யோசிக்ககூட அவருக்கு நேரம் இல்லை. இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு பிறகு அவர் தனது வீட்டிற்கு வந்தார். ஆனால் அவர் வந்ததோ இன்பச் செய்தியுடன் அல்ல. அவர் கொரோனாவால் அவதிப்பட்டு வீட்டிற்கு வந்தார். தொடர்ந்து அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு மீண்டு எழுந்தார். பிறகு இரண்டு மாதங்களுக்கு பின் அவர் முழுமையாக குணமடைந்து மீண்டும் தனது சேவைக்குத் திரும்பினார். இவரை கண்டு நான் மனம் நெகிழ்ந்தேன். இவரே எனது கதாநாயகன்.